ஆசிரியர் ஆபாச படம் பார்த்ததாக கூறி, ஜிபே மூலம் பணத்தை பெற்று மோசடி!

திருச்சி மணப்பாறையை சேர்ந்த ஆசிரியர் சார்லஸ் மைக்கல் என்பவர், ஆபாச படம் பார்த்தது தொடர்பாக 20,000 ரூபாயை ஜிபே மூலம் அனுப்ப வேண்டும் என மர்மநபர்கள் மிரட்டல் விடுத்தனர். ஆசிரியர் அளித்த புகாரின் பேரில், போலீஸ் போல் மிரட்டி பண மோசடியில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஹரிஷ் உள்பட 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், மாணவர் ஹரிஷ் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தன்னுடைய மொபைல் எண்ணை பயன்படுத்தி ஜிபே மூலம் பண மோசடி செய்தவர்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், நான் கல்லூரியில் படித்து வருவதால், வழக்கில் முன்ஜாமின் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் சாட்சிகளை கலைக்க கூடாது, காவல் நிலையத்தில் ஆஜராகி காலையில் கையெழுத்திடவேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

Exit mobile version