விளைநிலங்களில் உள்ள கட்டடங்களில் டாஸ்மாக் கடைகள் அமைக்கலாம்- உயர் நீதிமன்றம்

விளைநிலங்களில் உள்ள கட்டடங்களில் விதிகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த, மயிலம்பாடி கிராமத்தில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றத்தின் அப்போதைய நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு, விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மதுபானக் கடைகளை மூடும்படி இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வு, விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகளை அமைக்க சட்டப்பூர்வ தடை இல்லை என்பதால், விதிகளை பின்பற்றி டாஸ்மாக் கடைகளை அமைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.

Exit mobile version