சபரிமலைக்கு வரும் இலங்கை பக்தர்களுக்கு கட்டண சலுகை

இலங்கையில் இருந்து சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு, கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மட்டக்களப்பு மற்றும் மாதுலாவில் இருந்து, சபரிமலைக்கு செல்ல, விமானத்தின் மூலமாக, மதுரை விமானநிலையத்திற்கு 40க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தனர்.

அவர்கள், அங்கிருந்து கார் மூலமாக சபரிமலைக்கு செல்கின்றனர். இதனிடையே, இலங்கையிலிருந்து வரும் ஐயப்ப பக்தர்களுக்கு, புனித பயணம் என்ற பெயரில் இலங்கை அரசு சலுகை கட்டணம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு அந்நாட்டு அரசு ஏற்பாடு செய்துள்ளதாகவும் பக்தர்கள் தெரிவித்தனர்.

 

 

Exit mobile version