"3 மணிநேர படத்தில் வேண்டுமென்றால் முதலமைச்சர் ஆகலாம், ஆனால் நிஜத்தில் முடியாது" – தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை கோட்டூர்புரத்தில் பொதுமக்களுடன் தமிழிசை சவுந்தரராஜன் தீபாவளியைக் கொண்டாடினார். அப்போது மியூசிக்கல் சேர், லெமன் அண்ட் த ஸ்பூன் உள்ளிட்ட விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் கலந்து கொண்டு பொதுமக்களோடு தீபாவளியை கொண்டாடினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் சர்க்கார் படம் குறித்து கருத்து தெரிவித்தார் அதில், அரசு நிர்ணயித்த விலையை விட பல மடங்கு கூடுதல் விலையில் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக கூறினார். அரசாங்கத்தை ஏமாற்றி வியாபாரம் செய்துவிட்டு அரசாங்கம் எப்படி நடக்க வேண்டும் என்று படம் எடுக்கப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். கள்ள கதைக் கருவை வைத்து கள்ள ஓட்டுக்கு எதிராக சர்கார் படம் எடுக்கப்பட்டிருப்பதாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Exit mobile version