டெல்லியில் இருந்து சிறப்பு ரயிலில் சென்னை வந்தடைந்த தமிழர்கள்!

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, டெல்லியில் சிக்கியிருந்த ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள், சிறப்பு ரயில் மூலம் புறப்பட்டனர். அவர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள விடுதிகளில் அறைகளை மாநகராட்சி அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னையில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியிலும், கட்டணம் செலுத்த தயாராக இருப்பவர்களை பிரைடு இண்டர்நேஷ்னல் மற்றும் அம்பாசிடர் பல்லவா உள்ளிட்ட தனியார் விடுதிகளிலும் தங்க வைக்க உள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளை உணவுடன், கபசுரக் குடிநீரும் வழங்கப்படவுள்ளது. மையங்களில் தங்க வைக்கப்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்று உறுதி செய்யப்படுபவர்களுக்கு, மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படும். மற்றவர்கள் அனைவரும் ஏழு நாட்கள் அறைகளில் தனிமைப்படுத்தப்படுவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Exit mobile version