தமிழ்பாட தேர்வு மிக எளிதாக இருந்தது – மாணவர்கள்

இன்று நடைபெற்ற பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் பாட தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று துவங்கின. முதல் நாளான இன்று தமிழ் பாடத் தேர்வு நடந்தது. கடந்த ஆண்டு வரை, தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடங்கள், வினாத்தாள்-1 வினாத்தாள்-2 என இரண்டு தேர்வுகள் நடந்த நிலையில், இந்த ஆண்டு முதல், ஒரே தேர்வாக நடத்தப்படுகிறது.

தமிழ்ப்பாடத் தேர்வு இன்று நடைபெற்ற நிலையில், தேர்வு மிக எளிதாக இருந்ததாகவும், தமிழ் பாடத்திற்கு ஒரே தேர்வாக மாற்றி அமைத்திருப்பதை வரவேற்பதாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.

Exit mobile version