மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தமிழகம் சிறப்பாக செயல்படுத்துகிறது : ஏ.சி சண்முகம்

மழைநீர் சேகரிப்பு திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக ஏ.சி.எஸ் கல்விக் குழும தலைவர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னை செஞ்சிலுவை சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தண்ணீர் விநியோக லாரிகளின் இயக்கத்தை துவக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஏ.சி.எஸ் கல்விக் குழுமம் உறுதுணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து ஏசிஎஸ் குழுமம் செய்யும் என்றும் அவர் கூறினார்.

Exit mobile version