தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக மாணவிகள்

டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டியில், வெற்றி பெற்று தமிழகம் திரும்பிய மாணவிகளுக்கு, விருதுநகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தனியார் நிறுவனம் மற்றும் தனியார் பள்ளி இணைந்து நடத்திய, தேசிய அளவிலான ரோபோட்டிக் போட்டி டெல்லியில் நடைபெற்றது. போட்டியில், தமிழகம், குஜராத், கேரளா உள்ளிட்ட 20 மாநிலங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த, அருப்புக்கோட்டை தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், 4 பேர் பங்கேற்று, மூன்றாவது இடத்தை பிடித்து, உலக அளவிலான ரோபோட்டிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.  இந்த நிலையில்,  தேசிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்று சொந்த ஊர் திரும்பிய மாணவிகளுக்கு, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Exit mobile version