டெல்லி ஜெ.என்.யூ பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர் தற்கொலை

டெல்லி ஜெ.என்.யூ. பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர், கல்லூரி வளாகத்தினுள்ளேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிஷி ஜோசுவா என்பவர் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கிலம் இறுதி ஆண்டு பயின்று வந்தார். இந்நிலையில் மாணவரை காணவில்லை என்று நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், கல்லூரி வளாகத்தில் உள்ள மற்றொரு அறையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. உடல் கைப்பற்றப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. மன அழுத்தம் காரணமாக மாணவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக தனது பேராசிரியருக்கு மெயில் ஒன்றையும் மாணவர் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Exit mobile version