தமிழகம், புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் மலை சார்ந்த பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு, இரவு நேரங்களில் உறைபனி தொடரும் என்றும், உள் மாவட்டங்களில் மூடுபனி நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. உதகையில் குறைந்தபட்ச வெப்பநிலை 3.3 செல்சியஸ் பதிவாகியுள்ளதாகவும், சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், அதிகாலை நேரங்களில் பனிமூட்டமும் காணப்படும் என வானிலை மையம் கூறியுள்ளது.

 

Exit mobile version