தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து இன்று அதிகாரிகளுக்குப் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்துச் சென்னையில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று அதிகாரிகளுக்குப் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான பணிகளில் மாநிலத் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலுக்கு 92 ஆயிரத்து 771 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்களும் பல்வேறு மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. இந்நிலையில் மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் தேர்தல் பணிகளுக்குத் தயாராகும் வகையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று அவர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டத் தேர்தல் அதிகாரிகளுக்கு அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள் 5 பேர் கலந்துகொள்கின்றனர். உள்ளாட்சித் தேர்தலுக்கான நடைமுறைகள், ஏற்பாடுகள் ஆகியவை குறித்து அவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Exit mobile version