மேகேதாட்டு அணை விவகாரம் : மோடியுடன் ஆளுநர் பன்வாரிலால் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஆளுநர் பன்வாரிலால் மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. மேகேதாட்டுவில், கர்நாடக அரசு அணை கட்டும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆளுநர் பன்வாரிலால் டெல்லி சென்றுள்ளார். பிரதமர் மோடியைச் சந்தித்த அவர், மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் அவர் எடுத்துரைத்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் பன்வாரிலால் சந்தித்துள்ளார்.

Exit mobile version