வீட்டு உரிமையாளர்களுக்கு தமிழக அரசு எச்சரிக்கை !

வாடகை வீட்டில் குடியிருக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துப் பணியாளர்களர்களை காலி செய்யுமாறு நிர்பந்திக்கும் வீட்டு உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, தன்னலம் கருதாது பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், வாடகை வீடுகளில் வசித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை காலி செய்யுமாறு வீட்டின் உரிமையாளர்கள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில் ஈடுபடும், வீட்டு உரிமையாளர்கள், நில உரிமையாளர்கள், மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள், மாநகராட்சி ஆணையர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version