950 பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டப்பயன்கள் கிடைக்க நடவடிக்கை : அமைச்சர் சரோஜா

கும்பகோணத்தில் 950 பேருக்கு தாலிக்கு தங்கம் திட்டத்தின் பயன்கள் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். பேரவையில் கேள்வி நேரத்தின்போது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர், கும்பகோணம் பகுதியில் இரண்டு அங்கன்வாடி மையம் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த ஆண்டே நிறைவேற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version