தமிழக அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு – அனைத்து மருத்துவர்களின் ஒருங்கிணைப்பு குழு தகவல்

தமிழக அரசு மருத்துவர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.  மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 ம் தேதி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்தனர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்தத்துக்கு எதிராக மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அனைத்து மருத்துவர்களின் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது. மருத்துவர்களின் கோரிக்கை தொடர்பாக சுகாதாரத்துறை முதன்மை செயலர் 17ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

 

 

Exit mobile version