திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ.க்கள் 18 பேரின் தகுதி நீக்கத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டுக்குச் செல்ல 30 நாட்கள் அவகாசம் உள்ளது. இந்த அவகாசத்திற்குப் பிறகு, 18 தொகுதிகளிலும் தேர்தல் நடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. 18 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில், ஜனவரிக்கு முன்னதாக திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுடன் இணைத்து நடத்தப்படலாம் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version