தமிழ்நாட்டில் ஒரே நாளில் 6,983 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், திமுக அரசின் அலட்சியம் காரணமாக, கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டிவருகிறது. இதனால், நேற்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் புதிதாக 3 ஆயிரத்து 759 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, மொத்த பாதிப்பில் பாதி பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

இதன் மூலம், மொத்த பாதிப்பு 27 லட்சத்து 67 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றால் 11 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 36 ஆயிரத்து 825 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றில் குணமடைந்து 721 பேர் வீடு திரும்பிய நிலையில், 22 ஆயிரத்து 828 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version