தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி வரை நடக்கிறது : சபாநாயகர்

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பட்ஜெட் மீதான விவாதத்திற்காக நான்கு நாட்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. வரும் 11 ஆம் தேதி முதல் 14 வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார்.

முன்னதாக சட்டப்பேரவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

Exit mobile version