மோடி மீண்டும் பிரதமரானதை உற்சாகமாக கொண்டாடும் தமிழக பாஜக

இந்திய பிரதமராக நரேந்திர மோடி 2வது முறையாக பதவியேற்ற நிலையில், தமிழகம் முழுவதும் பாஜகவினர் இதனை உற்சாகமாக கொண்டாடினர்

மோடி பிரதமராக பதவியேற்றதையொட்டி சென்னையில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். மேலும், சாலைகளில் சென்றவர்கள் இனிப்புகள் வழங்கியும் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவை துடியலூரில் வடக்கு மாவட்ட பாஜகவினர் இசை கருவிகள் முழங்க பாட்டாசுகள் வெடித்து பிரதமரின் பதவியேற்பை கொண்டாடினார்.

பேருந்து நிறுத்தத்தில் வைத்து ஜிலேபியை சுடச் சுட சுட்டுப் பொதுமக்களுக்கு வழங்கினர். விழுப்புரம், நீலகிரி, சேலம், புதுக்கோட்டை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜகவினர் பேரணியாக சென்று பிரதமரின் பதவியேற்பை கொண்டாடினர். கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பாஜகவினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி தங்களின் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்

Exit mobile version