நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு வங்க கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும் என்பதால், நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் டெல்டா மாட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னையை பொறுத்தவரை நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version