புரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வி

புரோ கபடி லீக் தொடரின் 70-வது லீக் போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணியிடம் தமிழ் தலைவாஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

ப்ரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. பெங்களூரில் நடந்த 70-வது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின.

ஆட்டம் தொடங்கிய 20-வது வினாடியில் பெங்களூரு வீரர் ரோஹித் குமார் முதல் 2 புள்ளியை தனது அணிக்கு பெற்று தந்தார். இதன் பிறகு இரு அணிகளும் ஒன்று இரண்டு புள்ளிகள் வீதம் குவிப்பதில் தீவிரம் காட்டி வந்தன. இதனால் முதல்பாதி முடிவில் 14-13 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் பெங்களூரு முன்னிலை பெற்றது.

இதன் பிறகு தொடங்கிய 2ம் பாதியிலும், இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இருந்த போதிலும், பெங்களூரு அணி தொடர்ந்து புள்ளிகளை குவித்தது. இதற்கிடையே பெங்களூரு அணி தமிழ் தலைவாஸ் அணியை 2 முறை ஆல் அவுட் செய்து வெற்றியை எளிதாக்கியது. இதனால் ஆட்டத்தின் முடிவில், 33-27 என்ற புள்ளிக் கணக்கில் பெங்களூரு அணி தமிழ் தலைவாஸை வீழ்த்தியது. இதனால் 7 தோல்வியை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி 9-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

Exit mobile version