புரோ கபடி லீக்: பெங்களூரு அணி சாம்பியன்

புரோ கபடி லீக் தொடரில் குஜராத்தை வீழ்த்தி, பெங்களூரு அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. புரோ கபடி லீக் ஆறாவது சீசனின் இறுதிப்போட்டி மும்பையில் நடந்தது. இதில் குஜராத் மற்றும் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியில், 16க்கு 9 என்ற புள்ளிகள் கணக்கில் குஜராத் முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் ஆக்ரோஷமாக விளையாடிய பெங்களூரு வீரர்கள், புள்ளிகளை குவித்தனர். முடிவில் 38க்கு 33 என்ற கணக்கில் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது.

Exit mobile version