புரோ கபடி லீக்: பெங்கால், டெல்லி அணிகள் இறுதிப்போட்டியில் மோதல்

புரோ கபடி லீக்கின் இறுதிப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியும் டெல்லி தபாங் அணியும் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

குஜராத்தில் நடைபெற்ற இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், யு மும்பா அணியை பெங்கால் வாரியர்ஸ் அணி எதிர்கொண்டது. ஆட்டத்தின் முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் சிறப்பாக ஆடிய பெங்கால் அணி 18-12 என்ற புள்ளிகளில் முன்னிலை பெற்றது. 2-வது பாதியில் மும்பை அணி எழுச்சி பெற்றது. இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை குவித்ததால் ஆட்டம் பரபரப்பான கட்டத்தை எட்டியது.

பெங்கால் அணி கடைசி நிமிடத்தில் 2 புள்ளிகள் எடுத்ததால் 35-37 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. மற்றொரு அரையிறுதியில் பெங்களூர் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் டெல்லி அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றன.

Exit mobile version