கொரோனா வைரஸ்சால் தமிழக மக்கள் அச்சப்படத் தேவையில்லை- அமைச்சர் செல்லூர் கே.ராஜூ

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில், 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்ற கிட்டாத்தான் எனப்படும் மினி மராத்தான் போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.  காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் தொடங்கி இந்தப் போட்டி, உலகத் தமிழ்ச்சங்கம் வழியாக, தமுக்கம் மைதானத்தில் முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, கொரானா வைரஸ்சால் தமிழக மக்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும்,  தமிழகத்தில் கொரோனா வைரஸ்சை தடுக்க அனைத்து முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

Exit mobile version