ராஜபக்சவை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டம்

இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சவின் பெங்களூரு வருகையை கண்டித்து தமிழ் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன.

பெங்களூரு சுதந்திர பூங்காவில் தமிழ் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு திராவிட விடுதலை கழகம், கர்நாடக தமிழர் கட்சி, இளந்தமிழக இயக்கம், மே 17 இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஆதரவு அளித்துள்ளன. அப்பாவி மக்களின் உயிரிழப்பிற்கு காரணமான ராஜபக்சவை பெங்களூருவில் அனுமதிக்கக்கூடாது என போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

Exit mobile version