தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத் தேர்தல்

எந்தவித அரசியல்/ நிறுவன பாகுபாடுகளும் இன்றி அனைத்து செய்திவாசிப்பாளர்களையும் ஒன்றுதிரட்டி அவர்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாக்கொண்டு தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கத்திற்கு, ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்திமுடிக்க செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

அதன்அடிப்படையில் தேர்தல் அலுவலர்களின் மேற்பார்வையில் கடந்த செப்டம்பர் 5 ம்தேதி சென்னையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி பள்ளியில் தேர்தல் நடைபெற்று, அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன

வெற்றிபெற்றவர்களுக்கான பதவியேற்கும் நிகழ்வு இன்று ( 12.09.2021) சென்னை அடையாறு அண்ணா பல்கலைகழக வோல்டெக் உமாபதி ஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்ட நீதிபதி. டாக்டர்.ஐ. ஜெயந்தி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். தேர்தல் அலுவலர் திரு. செந்தமிழ் அரசு பதவிப்பிரமானம் செய்து வைத்தார். புதியநிர்வாகிகள் உறுதிமொழி கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

முழுக்க முழுக்க ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி, சங்கத்திற்கான நிர்வாகிகளை தேர்ந்தேடுத்து மற்ற சங்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்வது, தமிழ் செய்தி வாசிப்பாளர்கள் சங்கம் என்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்

சங்கத்தின் புதிய நிர்வாகிகளாக பதிவியேற்றுக்கொண்டவர்களின் விபரங்கள்

தலைவர்
பிரபுதாஸன்

பொதுச்செயலாளர்
சண்முகவேல்

பொருளாளர்
தமிழரசி சிவக்குமார்

துணைதலைவர்கள்
சி.ஏ.மோகன்ராஜ் , ஜெயஸ்ரீ சுந்தர்

துணைப் பொதுச்செயலாளர்கள்
கிரிஜாஸ்ரீ , சிவக்குமார் , கிறிஸ்டோஃபர்

செயற்குழு உறுப்பினர்கள்
பராசக்தி செந்தில்குமரன் , அருணா ரமேஷ் , ஐஷ்வர்யா கிரிஷ் , சங்கீதா சுரேஷ், சமீர் அக்தர் , மீனாட்சி சுந்தரம் , பாலகணேஷ்
மனோஜ்குமார் கோபாலன் ,கௌரி , ஜெயச்சந்திரா , ஈவ்லின் பிரசன்னா, மோஸஸ் ரத்தினராஜ் , அருண் பிரசாத் , அமிர்தவல்லி, பாலவேல் சக்ரவர்த்தி

Exit mobile version