2019ம் ஆண்டிற்கான சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள்

2019ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளை முதலமைச்சர் பழனிசாமி தலைமை செயலகத்தில் வழங்கினார்.

தமிழுக்கும் தமிழியல் ஆய்வுக்கும் தொடர்ந்து தொண்டாற்றி வரும் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள் மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோரின் பணியை சிறப்பிக்கும் வகையில் கடந்த 2012ம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2019ம் ஆண்டிற்கான சித்திரைத் திங்கள் தமிழ் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா விருது, சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் மற்றும் அரசு அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள் கலந்துகொண்டனர்.

Exit mobile version