ஜி.எஸ்.டி சட்ட திருத்தத்தை வலியுறுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் டில்லியில் 19-ல் பேரணி

ஜி.எஸ்.டி சட்ட திருத்தம், ஆன்லைன் வர்த்தக தடை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 19ஆம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் டெல்லியில் பேரணி நடத்தப்பட உள்ளது.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் தலைவர் விக்கிரமராஜா, ஜி.எஸ்.டியால் 27 விழுக்காடு வர்த்தகம் குறைந்துள்ளதாக குற்றம்சாட்டினார். ஆனால், பொருட்களின் விலை குறையவில்லை என்று அவர் தெரிவித்தார். எனவே ஜி.எஸ்.டி சட்ட திருத்தம், உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம், ஆன்லைன் வர்த்தகத்துக்கு தடை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 19ம் தேதி டெல்லியில் பேரணி நடத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

 

 

 

 

Exit mobile version