உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம்

தமிழக அரசின் சிறப்பான செயல்பாட்டினால் கல்வி கற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் திண்டல் பகுதியிலுள்ள, வேளாளர் கல்வி நிறுவனங்களின் 50ஆம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர், முதல் தலைமுறை உயர்கல்வி பயில்பவர்களுக்கு உதவும் விதமாக, தமிழக அரசு 382 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக தெரிவித்தார். 2011ஆம் ஆண்டு தமிழகத்தில் உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 32 சதவீதமாக இருந்தது, பல்வேறு நடவடிக்கை காரணமாக தற்போது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 48 புள்ளி 6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர் கூறினார். இந்தியாவிலேயே உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version