தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு-வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிதமானமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்கள் மற்றும் திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழை வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exit mobile version