இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும்

இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. உலக வானிலை தின கொண்டாட்ட நிகழ்ச்சி, சென்னை வானிலை ஆய்வு மையத்தில் நடைபெற்றது. இதில், வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலசந்திரன் முன்னிலை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 1980-ம் ஆண்டுக்கு பின்னர் கடந்த 2016-ம் ஆண்டு முதல் இந்தியாவில் வெப்பம் அதிகமாக காணப்படுகிறது எனவும், கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகரித்து வருகிறது எனவும் கூறினார். மேலும், இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும். என்று தெரிவித்தார்.

Exit mobile version