டெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சி பெற்று வந்த தமிழக மாணவி தற்கொலை

டெல்லியில் ஐ.ஏ.எஸ் பயிற்சியில் ஈடுபட்டு வந்த தமிழக மாணவி ஸ்ரீமதி, தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த ஆலாம்பாளையத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற மாணவி, டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ்.பயிற்சி மையத்தில் பயின்று வந்தார். இந்நிலையில், தங்கியிருந்த விடுதியில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக, காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டெல்லியில் தமிழக மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version