தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் புதிதாக 5 ஆயிரத்து 127 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் புதிதாக 5 ஆயிரத்து 127 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

42ஆயிரத்து 801 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 2 ஆயிரத்து 904 பேர் ஆண்கள் என்றும், 2 ஆயிரத்து 223 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 308 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 819 ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 649 பேரும், ஈரோட்டில் 530 பேரும், சேலத்தில் 343 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே போன்று, திருப்பூரில் 316பேரும், செங்கல்பட்டில் 248 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

7 ஆயிரத்து 159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 91பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 64 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 27 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version