தமிழ்நாட்டில் புதிதாக 6 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் புதிதாக 6 ஆயிரத்து 596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநிலம் முழுவதும் புதிதாக 6 ஆயிரத்து 596 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 52 ஆயிரத்து 884 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 3 ஆயிரத்து 709 பேர் ஆண்கள் என்றும், 2 ஆயிரத்து 887 பேர் பெண்கள் என்றும் சுகாதாரத்துறை கூறியுள்ளது.

சென்னையில் மேலும் 396 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 200ஆக உள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 793 பேரும், ஈரோட்டில் 686 பேரும், சேலத்தில் 472 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று, திருப்பூரில் 419 பேரும், தஞ்சாவூரில் 338 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

10 ஆயிரத்து 432 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், ஒரே நாளில் 166பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 109 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 57 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Exit mobile version