தமிழக காவல் துறையில் 21 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது அறிவிப்பு

சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசு தலைவர் விருதை தமிழகத்தைச் சேர்ந்த 23 காவலர்கள் பெற உள்ளனர்.

70-வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக பணியாற்றிய 855 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினருக்கு, குடியரசு தலைவர் காவலர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பாக பணியாற்றிய, திருச்சி சிறப்பு புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி., கோவிந்தசாமி, ஈரோடு சிறப்பு காவல்படை ஆய்வாளர் சொரிமுத்து ஆகியோர் தனித்துவமிக்க செயல்பாடுகளுக்கான தகைசால் விருதை பெறுகின்றனர். இதே போல், சிறப்பான செயல்பாடுகளுக்காக, சென்னை பெருநகர தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஸ்வரி, ராமநாதபுரம் டிஐஜி காமினி, போலீஸ் அகாடமி எஸ்.பி., சாந்தி மற்றும் சென்னை கூடுதல் எஸ்.பி., அசோக் குமார், சென்னை போலீஸ் சிறப்பு டிவிசன் கூடுதல் எஸ்.பி., ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version