தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலம் திகழ்கிறது-அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும் தான் தொழில் துறைக்கு தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் அரசு ஏற்படுத்தி உள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கான கருத்தரங்கு கூட்டம் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், தொழில் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருவதாக கூறினார்.

தடையற்ற மின்சாரம் தொழில் துறைக்கு வழங்கப்படுவதாக கூறிய அவர், சிறு குறு தொழில்துறையினர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Exit mobile version