பெண் குழந்தைகளை காக்கும் திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு தேர்வு

பெண் குழந்தைகளை காக்கும் திட்டத்தில் சிறந்த மாநிலமாக தமிழகத்துக்கு கிடைத்துள்ள விருதினை, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காட்டி வாழ்த்து பெற்றார். நாட்டிலேயே பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தில் இலக்கினை, சிறந்த முறையில் செயல்படுத்தியதற்காக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், தமிழ்நாடு சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அந்த விருதினை காண்பித்து அமைச்சர் சரோஜா வாழ்த்து பெற்றார். இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Exit mobile version