எரிசக்தி துறையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது

தமிழகத்தில் எரிசக்தி துறையில் தொழில் துவங்க பல்வேறு புதுமையான திட்டங்களை தமிழக அரசு வழங்கி உள்ளதாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

உலக முதலீட்டாளர் மாநாட்டின் 2ம் நாளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.சி.சம்பத் ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எம்.சி. சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர்.

Exit mobile version