பழனிசாமி ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக திகழ்கிறது-பிரேமலதா விஜயகாந்த்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் மின்வெட்டில்லா மாநிலமாக திகழ்வதாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் அதிமுக கூட்டணியின் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், நயினார் நாகேந்திரன் வெற்றி பெற்றால் இம்மாவட்டத்திற்கு அரசு மருத்துவ கல்லூரி கொண்டு வருவதாகவும், மீனவர்களின் வாழ்வாதரத்திற்கு உறுதுணையாக இருப்பதாகவும், வாக்குறுதி அளித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், அதிமுக கூட்டணி ஒட்டுமொத்த மக்களின் ஆதரவை பெற்ற மகத்தான கூட்டணி என்றும், பல சூழ்ச்சிகளை வென்று அமைக்கப்பட்ட கூட்டணி எனவும் குறிப்பிட்டார். திமுக ஆட்சியில் 8மணி நேரம் மின்வெட்டு இருந்ததாகவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மின்வெட்டில்லா மாநிலமாக தமிழகம் திகழ்வதாகவும், மத்தியிலும் மாநிலத்தில் நிலையான ஆட்சி தொடர அதிமுக கூட்டணியை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

Exit mobile version