மீண்டும் கொரோனா பராமரிப்பு மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழக சுகாதாரத்துறை உத்தரவு!

பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் பராமரிப்பு மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தாலும், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக, மாவட்டத்திற்கு ஒன்று என்ற எண்ணிக்கையில் கொரோனா பராமரிப்பு மையத்தை உடனடியாக மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொற்று மிகவும் குறைந்ததால், அக்டோபர் இறுதியில் அம் மையங்கள் மூடப்பட்ட நிலையில், மீண்டும் பராமரிப்பு மையங்கள் திறக்கப்பட உள்ளன.

Exit mobile version