தமிழ்நாட்டில் மார்ச் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு!

தமிழ்நாட்டில் மார்ச் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில், பிப்ரவரி 28ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைந்த நிலையில், மார்ச் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவெளியில் வருபவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன், பாதுகாப்பு இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 

Exit mobile version