தமிழக அரசு சாலைகளை தரம் உயர்த்த ரூ. 60 கோடி நிதி ஒதுக்கீடு

சாலைகளை தரம் உயர்த்த 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

ஊரக சாலைகளை மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்காக நிதி ஒதுக்கி, பணிகளை தொடங்க தீவிரம் காட்டி வந்த நிலையில், சாலைகளை தரம் உயர்த்த 60 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அதன்படி, விழுப்புரம், திருநெல்வேலி மாவட்டத்தில் 85 கிலோ மீட்டர் ஊரக சாலைகள் 60 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட சாலைகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட இந்த அரசாணையால், மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version