7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது: அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலை மற்றும் வானரமுட்டியில் தமிழக அரசியின் விலையில் மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டார்.

  270 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றிய அவர், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், மத்திய அரசுக்கு தேவையான அழுத்ததை தந்து கொண்டு இருப்பதாகவும் கூறினார். டெல்டா மாவட்டங்கள் வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்தது மட்டுமின்றி, மத்திய அரசிடம் கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version