கஜா மறு சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை கவனிக்க 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கும்பகோணம் சார் ஆட்சியர் பிரதீப் குமார் நாகப்பட்டினம் கூடுதல் திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெகநாதன் கஜா புயல் சீரமைப்பு பணி அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் மறுசீரமைப்பு மற்றும் நிவாரண பணிகளை சென்னையில் இருந்து கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version