தமிழகம் முழுவதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை!

தமிழகம் முழுவதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  தமிழக காவல்துறைக்கு பல்வேறு உதவிகளை செய்து வந்த ஃப்ரெண்டஸ் ஆஃப் போலீஸ் அமைப்பு, வரையறை மீறி செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மேலும் அந்த அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் பல தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version