பொள்ளாச்சி பாலியல் வழக்கு : தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில், குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

 

பொள்ளாச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை ஆபாச படமெடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதை எதிர்த்து குற்றவாளிகள் தொடர்ந்த வழக்கில், அவர்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டது.  இந்த வழக்கை பொள்ளாச்சி போலீசார் விசாரித்து வந்தனர்.

அதன் பின்னர் சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது. கைதானவர்கள் அனைவரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், குண்டர் தடுப்பு சட்டத்தை நீக்கி, சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

Exit mobile version