”அலட்சியம் காட்டாத அதிமுக அரசு”-திமுக விட்டு சென்ற திட்டங்களையும் செயல்படுத்தியது…

கொரோனா தடுப்பு பணியில் அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, முதலமைச்சரின் பதிலுரையில், அதிமுக ஆட்சி தொடர்பாக பேசிய கருத்துக்கு, பதில் அளிக்கும் வகையில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று ஏற்பட்ட பேரிடர் காலத்தில் அதிமுக அரசு அலட்சியம் காட்டாமல் உழைத்ததாகத் தெரிவித்தார். அதிமுக ஆட்சியின்போது ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். திமுக பாதியில் விட்டுச் சென்ற திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் குறிப்பிட்டார். ஆளுநர் உரையில் நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக சுட்டிக்காட்டப் பட்டுள்ள நிலையில், மக்களின் முக்கிய திட்டமாக உள்ள காவிரி – கோதாவரி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.

Exit mobile version