நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் கைது

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். எல்லத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்வது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், ராமேஸ்வரத்தை சேர்ந்த நெடுந்தீவு அருகே இன்று அதிகாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி 11 மீனவர்கள் மற்றும் 2 படகுகளை சிறைபிடித்து சென்றனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

Exit mobile version