சவுதி கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் சிறைப்பிடிப்பு !

தமிழக மீனவர்கள் வளைகுடா நாடுகளிலும் தங்கி மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். கன்னியாகுமரி, ராமாநாபுரம் மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் பஹ்ரைனில் தங்கி மீன்பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில், 6 படகுகளில் சென்ற 30 மீனவர்கள் சவுதி கடல் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களை சுற்றி வளைத்த சவுதி கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்தனர்.

சவுதி அரேபிய அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version