தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த இலங்கை மீனவர்கள்…

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறை மீனவர்களின் மீன் வலைகள் மற்றும் உபகரணங்களை இலங்கை மீனவர்கள் பறித்துச் சென்றனர்.

ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் வழக்கம்போல் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, திடீரென்று இலங்கை மீனவர்கள் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.

மேலும் அவர்கள் வைத்திருந்த வாக்கி டாக்கி, செல்போன், வலைகள் உள்ளிட்ட ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள மீன்பிடி உபகரணங்களை பறித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து கடலோர காவல் படை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version